மாணவர்களுக்கு விருது

புளியால் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2022-10-02 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப்பள்ளியில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் சிறந்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வரலாறு ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்றார். தேவகோட்டை எல்.ஐ.சி. மேலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் முன்னிலை வகித்தனர்.

இதில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி மேலாளர் திலிப், வளர்ச்சி அதிகாரிகள் திருவேங்கடம், சஜின், உயர்நிலை உதவியாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில ஆசிரியை விமலா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்