டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

Update: 2022-06-04 15:48 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது32). இவர் தனக்கு சொந்தமான மினிலாரியில் நீடாமங்கலம் கடைவீதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது பெட்ரோல் பங்க் பகுதியில் காரில் பின்னால் வந்த சர்வமான்யம் கிராமத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (42) என்பவர் தனது காருக்கு வழிவிடும்படி ஹாரன் அடித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி, கலையரசனை கத்தியால் கிழித்தும், அவரை தாக்கியும் ரூ.10 ஆயிரத்து 350 ரூபாயை பறித்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கலையரசன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமூர்த்தியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்