அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-17 17:16 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). அரசு பஸ் டிரைவர். இவருக்கும் திருவெண்ணெய்நல்லூர் செல்லும் தனியார் பஸ் டிரைவர் செல்வம் என்பவருக்கும் இடையே நேர பிரச்சினை தொடர்பாக விழுப்புரத்தில் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் சரத்குமாரை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சரத்குமார் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்