பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டி

Update: 2023-03-04 19:30 GMT

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலவலகத்தின் கீழ் 37 பள்ளி விடுதிகளும், 11 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கியிருந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

போட்டியை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் பேச்சு, கட்டுரை போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவிகளுக்கு தனிதனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 400 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்