கலை திருவிழா போட்டி

கள்ளக்குறிச்சியில் கலை திருவிழா போட்டி நடைபெற்றது.

Update: 2023-03-08 19:57 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை திருவிழா விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் 250 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்