அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-09 09:24 GMT

சென்னை,

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்த நிலையில், திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வான நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்க்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்