12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-07-05 05:59 GMT

கோப்புப்படம்

சென்னை.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு 03-07-2022 அன்று தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 03-07-2022 அன்று இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மீனவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் இலங்கை கடற்படையின் நோக்கம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் உங்கள் அன்பான தலையீட்டை நாட விரும்புகிறேன். மேலும் 12 இந்திய மீனவர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்