கரூர் அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் யாழினி (வயது 22). இவர் கரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த யாழினி திடீரென மாயமானார். இதையடுத்து யாழினியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, யாழினியை தேடி வருகின்றனர்.