தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தொழிலாளி கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தொழிலாளி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-05-29 17:16 GMT

குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் தண்ணீர் பாய்ச்ச செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அன்று மாலை அவர் வீட்டிற்கு வரவில்லையாம். அவரது உறவினர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்தபோது மேல பணிக்கம்பட்டி பகுதியில் ஒருவருடைய தோட்டத்தில் இருந்த கிணற்றில் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்தவரை மீட்டு பார்த்தபோது, அவர் சுப்பிரமணி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியன் மகன் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்