விபத்தில் வாலிபர் பலி

திருத்தங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-09-21 19:51 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் பாண்டியன்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சங்கரபாண்டியன் (வயது 23). இவர் தனது எலக்ட்ரிக் பைக்கில் திருத்தங்கல்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முத்துமாரி நகரை சேர்ந்த பால்பாண்டி மகன் முத்தையா என்கிற வெற்றி (23) என்பவர் முருகன் (19), சுடலைமணி (24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். எதிர்பாராமல் இருவரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேரும் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சங்கரபாண்டின் பரிதாபமாக இறந்தார். முத்தையா விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்