கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை

சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-11-27 10:27 GMT

சென்னை,

சென்னையை அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் என்ற மாணவன் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே வகுப்பறையில் இருந்து வெளியேறிய புத்தாலா ஓம்கிரீஸ், கல்லூரி வளாகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்ததில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாணவன் புத்தாலா ஓம்கிரீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத பெற்றோர், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாடப்பிரிவில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்