எண்ணும்,எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி

நீடாமங்கலம், வலங்கைமானில் எண்ணும்,எழுத்தும் கற்றலை கொண்டாடும்‌ நிகழ்ச்சி

Update: 2023-03-22 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம் சீனிக்குடிக்காடு நடுநிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இலக்கியா செல்வமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சவுல்ராஜ் வரவேற்றார். ஆசிரிய பயிற்றுனர் இளையராஜா இத்திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார். முடிவில் ஆசிரியர் பிரோஸ் பானு நன்றி கூறினார். வலங்கைமான் ஒன்றியம், ஏரி, வேலூர் ஊராட்சியில் உள்ள சரசுவதி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்லதுரை, சுகந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் மகேஸ்வரி விழாவின் நோக்கம் குறித்து பேசினார். முடிவில் ஆசிரியர் தெய்வானை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்