ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த ஆண் உடல்

மாயனூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த ஆணின் உடலை கைப்பற்றி யார் அவர்? என்று ெரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-09 18:30 GMT

தண்டவாளத்தில் கிடந்த ஆண் பிணம்

கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து மகாதானபுரம் செல்லும் கரூர்-திருச்சி ெரயில்வே தண்டவாளத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்படு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், கரூர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்