விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Update: 2022-09-21 18:39 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின் மேரி கலந்து கொண்டு 12-ம் வகுப்பை சேர்ந்த 158 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதி முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ட்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்