திருவொற்றியூரில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து சாவு

திருவொற்றியூரில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-07-19 02:51 GMT

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தைச் சேர்ந்த வருண்காந்தி, சுப்பிரமணி என்ற காட்டாண்டி (வயது 40) ஆகியோருடன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்.

3 பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் சுப்பிரமணி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து விட்டார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டார். சக மீனவர்கள் கடலில் வலை போட்டு சுப்பிரமணியன் உடலை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து சுப்பிரமணி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்