மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார்.

Update: 2023-08-05 16:48 GMT


காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் , இருங்காட்டுகோட்டை பகுதியில் நடந்த 12 - 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார்.

பெங்களூருவை சேர்ந்த 13 வயது சிறுவன் பந்தயத்தின் போது இரு சக்கர வாகனம் மோதியில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் . இதனால் சம்பவ இடத்திலேயே மாணவர் ஹரிஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்