பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.99 சதவீதம் பேர் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 30-வது இடம் பிடித்தது.

Update: 2023-05-19 21:09 GMT

86.99 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 430 மாணவர்களும், 9 ஆயிரத்து 887 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 6 ஆயிரத்து 825 மாணவர்களும், 9 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 86.99 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.41 சதவீதமாக இருந்தது. இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.42 சதவீதம் குறைந்திருந்தது. மாநில அளவில் 30-வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு மாநில அளவில் 27-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

20 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

இதேபோல் 173 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியதில் 20 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதில் ஒரு பள்ளி மட்டும் அரசு பள்ளியாகும். கடந்த ஆண்டு 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இதில் 19 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்