பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-08-03 18:10 GMT

வலங்கைமான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தம்பி தனபாலன். அ.தி.மு.க.பிரமுகர். இவரது மகன் முத்துவின் மனைவி சுதா (வயது45). நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் செய்துவிட்டு கும்பகோணம் மன்னார்குடி சாலையில் தனது காரில் ஏற சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுதா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் மகாமாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் வலங்கைமான் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்