மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2023-07-06 18:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் அருகே சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்த கோபு மனைவி வித்யா (வயது 31). இவர், கடந்த வாரம் மழை பெய்யும் முன்பு வீட்டு வாசலில் கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புளிய மரத்தில் தாக்கிய மின்னல் வித்யா மீது தாக்கியது. இதில் உடல், தங்க நகைகள் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில், நேற்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த வித்யாவின் கணவர் கோபுவிடம் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர். அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் வித்யா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நிவாரண காசோலையை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்