35½ பவுன் நகை மாயம்

35½ பவுன் நகை மாயம்

Update: 2022-05-25 20:54 GMT

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி(வயது 53). இவர் இங்குள்ள தொடக்க கூட்டுறவு வங்கியில் தலைமை எழுத்தராக உள்ளார். இவர் தனது வீட்டில் 75 பவுன் நகைகள் வைத்துள்ளார். கடந்த மாதம் 5-ந் தேதி சில நகைகளை போட்டு ஒரு விசேஷத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து அனைத்து நகைகளையும் ஒரு பேக்கில் வைத்து பூட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி பேக்கை திறந்து பார்க்கும்போது 39 ½ பவுன் நகைகள் மட்டும் தான் இருந்துள்ளது. மீதி 35½ பவுன் நகைகளை காணவில்லை. நகைகளை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்