2 பேருக்கு 3 ஆண்டு சிறை

2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-08-26 19:07 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயா புவனேஸ்வரி (வயது 44). இவர் அருப்புக்கோட்டை பஜாரில் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பஜாரில் உள்ள கடைக்கு செல்வதற்காக அவரது வீட்டிலிருந்து பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஜெய புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த முஸ்தபா மகன் அப்துல் காதர் (31), மணி என்ற பேட்டை மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி முத்து இசக்கி விசாரித்து அவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்