கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்டமாக முதலாமாண்டு இளம் அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2023-06-16 18:20 GMT

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கி 8-ந்தேதியுடன் முதற் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.

இதனையடுத்து இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், இளம்அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்களை பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்