ஜூலை 1 முதல் தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ஜூலை 1 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2019-06-22 12:21 GMT
சென்னை,

தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1ந் தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்