நெல்லையில் போலீசாரின் அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் கைது; வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்

நெல்லையில் போலீசாரின் அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-01-04 04:29 GMT
நெல்லை,

நெல்லையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  இதில், தச்சநல்லூரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 14 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்