திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது பேருந்து மோதல்; 3 பேர் பலி

திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது பேருந்து மோதியதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-05-20 02:06 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.  அதில் இருந்த பயணிகளை மீட்பதற்காக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று உதவியுள்ளனர்.

இந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது அந்த வழியே சென்ற மற்றொரு பேருந்து அவர்கள் மீது மோதியுள்ளது.  இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்