சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் ரயில் மறியல் போக்குவரத்து பாதிப்பு

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் ரயில் மறியல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-05 05:24 GMT
சென்னை

அனைத்து நிறுத்தங்களிலும் விரைவு மின்சார ரயில்கள் நின்று சென்றதால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால்  ரயில்கள் காலதாமதமாக வருவதைக் கண்டித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகள் போராட்டத்தால் தாம்பரத்தில் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

மேலும் செய்திகள்