மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் - ஜெ.தீபா

மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என்று ஜெ.தீபா கூறியுள்ளார். #JDeepa

Update: 2018-02-24 17:14 GMT
சென்னை,

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெ.தீபா பேசியதாவது:

மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன். எனது லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும்.  என் பயணத்தில் தொண்டர்களாகிய நீங்கள் இருப்பீர்கள்.  மத்திய அரசின் தலையீட்டோடு, இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரிடம் வழங்கப்பட்டது.   எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை, விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்