உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்

உலக வெள்ளை குச்சி தினத்தை முன்னிட்டு ‘முயற்சிக்கு உறுதுணை விழிகள்’ என்ற அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர்களுக்கான உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Update: 2017-10-15 22:15 GMT

சென்னை,

இந்த நிகழ்ச்சியில் 100–க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேகா (வயது 28) என்ற பார்வையற்ற பெண் தொடர்ந்து இடைவிடாது 12 மணி நேரம் (காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை) சுமார் 160 தமிழ் சினிமா பாடல்களை மனப்பாடமாக பாடி அசத்தினார்.

இதை கேட்டுக்கொண்டிருந்த சக பார்வையற்ற மாணவிகள் மற்றும் பெண்கள் ரேகாவை ஒவ்வொரு பாடல் முடிவிலும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பார்வையிட்ட 2 பேர் கொண்ட நடுவர் குழு அதனை வீடியோவாக பதிவு செய்து, பார்வையற்ற பெண்ணின் சாதனை முயற்சியை லிம்கா புத்தக சாதனைக்காக அனுப்பி வைத்தது.

மேலும் செய்திகள்