சாராயம் விற்ற 2 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-30 18:45 GMT

மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் அஜித்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதே போல மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடைத்தெருவில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடைத் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்(20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்