சாராயம் பதுக்கிய 2 பெண்கள் கைது

சந்தவாசல் பகுதியில் சாராயம் பதுக்கிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-14 17:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோடு காவாங்கரை பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 53), புஷ்பகிரி வனிதா (47). இவர்கள் இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று இருவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்