அரவைக்காக 2ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக கொருக்குப்பேட்டைக்கு 2ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-02-12 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக கொருக்குப்பேட்டைக்கு 2ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக திருவாரூர் மாவட்டதில் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து சரக்கு ரெயிலில் ஏற்றப்பட்ட நெல் அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்