அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

Update: 2022-08-03 17:58 GMT

நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தெற்குநத்தம், இடையர் நத்தம், அரவத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக வடசென்னைக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்