தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-23 15:24 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் நெல்லையில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்