தனியார் தொழிற்சாலை வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ. 1.10 கோடி திருட்டு

ஆன்லைன் மூலம் ரூ. 1.10 கோடி திருடிய இரண்டு பேரை தனிப்படை போலீசார் கல்கத்தா சென்று கைது செய்தனர்.

Update: 2022-06-26 13:09 GMT

அம்பத்தூர்:

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த 14-ம் தேதி சுமார் 25 நிமிடத்தில் 6 தவணையாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் மர்ம நபரால் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இதில் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் தனியார் நிறுவனத்தின் பணத்தை திருடியது கொல்கத்தாவைச் சேர்ந்த சபீர் அலி, கிருஷ்ணகுமார் பிரதாப் என்பது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரிடம் இருந்து ரூ. 35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 28 லட்சத்தை முடக்கினர்.

இந்த ஆன்லைன் கொள்ளை கும்பல் பின் புலத்தில் வெளிநாட்டை சேர்ந்த 100-க்கணக்கான மோசடி நபர்கள் இருப்பதாகவும், அவர்களை முழுமையாக பிடிப்பது என்பது சிரமமான காரியம் என்றும் பொதுமக்கள் வங்கி கணக்குகளை பத்திரமாகவும் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்றும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்