10 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பழனி வழங்கினார்

Update: 2023-05-29 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 327 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 50 வீதம் ரூ.45 ஆயிரத்து 250 மதிப்பிலான 3 சக்கர மிதிவண்டிகளையும், 2 சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்