வராகி அம்மனுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்

வராகி அம்மனுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-07-31 18:38 GMT

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு ஒரு லட்சம் வளையலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்