சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-15 19:22 GMT

வடபொன்பரப்பி, 

வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்வராயன்மலை பெருமாநத்தம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 20), வரதராஜ் (26) என்பதும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பர்வதம் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்