மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

Update: 2022-11-15 18:42 GMT

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அருகன்குளம் ஆற்றுப்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு குளிக்க சென்றார். பின்னர் குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்துராமன் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்