வாஷியில் ரூ.1 கோடி போதை பொருளுடன் வாலிபர் கைது

வாஷியில் ரூ.1 கோடி போதை பொருளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-11 19:45 GMT

மும்பை, 

வாஷியில் ரூ.1 கோடி போதை பொருளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரூ.1 கோடி போதைப்பொருள்

வாஷி பகுதிக்கு ஒருவர் அதிகளவில் எம்.டி. போதை பொருள் விற்பனை செய்ய வர உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் இருந்து 1 கிலோ எம்.டி. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

வாலிபர் கைது

போலீசார் போதை பொருளுடன் சிக்கிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த சம்சுதீன் அப்துல் காதர் (வயது28) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்