தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு 'உத்யோக் ரத்னா' விருது - அரசு அறிவிப்பு

மும்பையில் தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு ‘உத்யோக் ரத்னா’ விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது

Update: 2023-07-29 19:15 GMT

மும்பை, 

மராட்டியத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மராட்டிய பூஷண் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 'உத்யோக் ரத்னா' என்ற விருதை வழங்க மாநில அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் முதலாவது 'உத்யோக் ரத்னா' விருதை யாருக்கு வழங்குவது என்பது குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோருடன் சேர்ந்து தொழில் துறை மந்திரி உதய் சமந்த் கலந்து ஆலோசித்தார். பின்னர் சட்டசபையில் மந்திரி உதய் சமந்த் கூறுகையில், "மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு முதல் 'உத்யோக் ரத்னா' விருதை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல இளம் தொழில் முனைவோர், பெண் தொழில்முனைவோர் மற்றும் மராட்டிய தொழில்முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்படும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்