குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மாடி மேற்கூரை இடிந்து விழுந்தது- 3 பேர் காயம்

தானேயில் 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மாடி மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-10-31 18:45 GMT

தானே, 

தானேயில் 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மாடி மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

மேற்கூரை இடிந்தது

தானே மாவட்டம் கல்வா, மனிஷ்நகர் பகுதியில் விக்ராந்த் என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று காலை கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்தது. இதில் அந்த தளம் தரை தளத்தில் செயல்பட்டு வரும் சலூனில் விழுந்தது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த 20 வயது வாலிபர் மற்றும் சலூன் ஊழியர், சலூனில் இருந்த 16 வயது சிறுவன் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கட்டிடத்துக்கு சீல்

இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்எச்சரிக்கையாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களை வெளியேற்றி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட கட்டிடம் 38 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

மேலும் செய்திகள்