மராட்டியத்தில் திடீர் நிலநடுக்கம்

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-07-22 14:29 GMT

புனே,

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் கொய்னா அணைக்கட்டு பகுதியில் இருந்து 12 கி.மீ தொலைவில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு பதறியடித்தப்படி வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகள் பதிவாகி இருந்தது.

தகவல் அறிந்த புவியியல் வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். நிலநடுக்கத்தால் சேதாரம் மற்றும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்