கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தாராவி பெண் நாடகமாடியது அம்பலம்

கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தாராவி பெண் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2022-08-29 11:40 GMT

மும்பை,

கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தாராவி பெண் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கற்பழிக்கப்பட்டதாக புகார்

மும்பை தாராவி பகுதியை சோ்ந்த 20 வயது திருமணமான பெண் கடந்த மே மாதம் தாராவி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், வீட்டில் தனியாக இருந்த போது அவரை 2 மர்ம நபர்கள் கத்தி முனையில் கற்பழித்து அதை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறியிருந்தார். இந்த புகார் தொடா்பாக போலீசார் வில்லே பார்லேயை சேர்ந்த அண்ணன், தம்பியை கைது செய்து 8 நாட்கள் சிறையில் அடைத்தனர். மேலும் குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீசார் துன்புறுத்தியதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கிடையே விசாரணையில் அண்ணன், தம்பிக்கு கற்பழிப்பு வழக்கில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. எனவே அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் போலீசார் பெண்ணின் வீடு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளில் பதிவாகி இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் பெண்ணை கற்பழித்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாடகமாடியது அம்பலம்

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண் போலி கற்பழிப்பு புகார் அளித்தது தெரியவந்தது. அவர் கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக கூறிய நேரத்தில் சுமார் 1½ மணி நேரம் வாட்ஸ்அப்பில் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தது தெரியவந்தது. பெண்ணுக்கு திருமண வாழ்க்கை பிடிக்காததால் அவர் கற்பழிப்பு நாடகமாடி போலீசில் பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழக்கை முடிப்பது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறாம்" என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்