அமராவதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட 13 வயது சிறுமி படுகாயம்

அமராவதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட 13 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-13 11:44 GMT

அமராவதி, 

அமராவதி நகரம் பட்டான் சவுக் கபடி பஜார் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் அகமத் கான் என்பவரை ஒரு கும்பல் வாள், கத்தியால் தாக்கினர். இதனால் அகமத் கான் தற்பாதுகாப்பிற்காக அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கும்பலை நோக்கி சுட்டு உள்ளார். ஆனால் குறி தவறியதால் பஜாரில் நடமாடிய 13 வயது சிறுமியின் இடது கால் மீது தோட்டா பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சிறுமி படுகாயமடைந்தாள். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. காயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் ஆர்த்தி சிங் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த சிறுமி ஹைதர்புராவை சேர்ந்தவர் எனவும், 9-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்