நாட்டில் தொற்று பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.

Update: 2023-02-23 20:03 GMT

புதுடெல்லி,

நம் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் 125 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றின் பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் 127 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. தொற்றினால் நேற்று முன்தினம் சண்டிகாரில் ஒருவர் பலியான நிலையில், நேற்று டெல்லியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா பலி மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 763 ஆக உயர்ந்து இருக்கிறது.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 65 அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனாவில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்