புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்!

புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-02-23 15:48 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை மாற்றி மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, புதுச்சேரியில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் 2018ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். நகரப்பகுதி எஸ்எஸ்பியாக இருந்த தீபிகா, முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தவில்லை என என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்தசூழலில் அவர் புதுச்சேரியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதைபோல புதுச்சேரியில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரி லோகேஷ்வரன் (2018ம் ஆண்டு பேட்ஜ்) மிசோரமுக்கும் மாற்றப்பட்டுள்ளார். மிசோரமில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரி (2017ம் ஆண்டு பேட்ஜ்) குலோத்துங்கனும், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவும் (2010ம் ஆண்டு பேட்ஜ்) புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்