இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்காததால் ஆத்திரம்: இளம்பெண் குத்திக்கொலை

பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2023-06-28 14:55 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் டினோர் நகரில் 25 வயதான இளம்பெண் தனது தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே, அதேபகுதியில் வசித்துவந்த கிருஷ்ண பவார் என்பவரின் சகோதரர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. அந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் இளம்பெண்ணும் அவரது தாயாரும் கலந்துகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பவார் அவரது மனைவி, கிருஷ்ண பவாரின் சகோதரன் அவரது மனைவி என 4 பேரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அந்த இளம்பெண்ணின் தாயாரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாயார் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் தாக்குதலை தடுக்க சென்றுள்ளார். அப்போது கிருஷ்ண பவார் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அந்த இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் சகோதரை அஞ்சலி பொஷெல் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்