உத்தர பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-02-03 17:58 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் இன்று இரவு 9.31 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்தேசம் உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்