கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா கூட்டணி ஆட்சி; டி.கே.சிவக்குமார் விமர்சனம்

கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடப்பதாக டி.கே.சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-07-17 22:00 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சி அல்ல. அது பா.ஜனதா கூட்டணி ஆட்சி. இந்த ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து அக்கட்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்களின் பங்கு 64 சதவீதமாக உள்ளது. இதில் காங்கிரசின் பங்கு 30 சதவீதமும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பங்கு 34 சதவீதமாகவும் உள்ளது. பசவராஜ் பொம்மை வேறு கட்சியில் இருந்து வந்தவர். இந்த ஆட்சி உண்மையான பா.ஜனதாவால் நடைபெறவில்லை. ஆளுங்கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிற கட்சிகளில் இருந்து சென்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டதால் நீண்ட காலமாக பா.ஜனதாவில் இருந்தவர்கள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பதாக நினைக்கிறார்கள். உள்கட்சி பிரச்சினையில் பா.ஜனதாவில் பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்