நாளை முதல் 15-ந்தேதி வரை பழங்கால நினைவுச்சின்னங்களை இலவசமாக பார்க்கலாம் மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டையொட்டி நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

Update: 2022-08-03 19:14 GMT

புதுடெல்லி, 

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டையொட்டி நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு பல்வேறு சலுகைகளையும் பல துறைகள் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை மக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி தனது டுவிட்டர் தளத்தில், 'சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், பகுதிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது' என குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்